×

பொதட்டூர்பேட்டையில் இரு தரப்பினரிடையே மோதல்: 5 வாலிபர்கள் கைது

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட சுந்தரம்மா கண்டிகை மற்றும் சுந்தரம்மா கண்டிகை காலனி மக்களிடையே நீண்ட காலமாக முன்விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடத்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலை, சுந்தரம்மா கண்டிகை காலனி பகுதியில், பைக் விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார். இதனால், சாலை விபத்தை தடுக்கும் வகையில் காலனி பகுதியில் மாநில நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள், கடந்த 3 நாட்களுக்கு முன்பு பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக பைக்கில் சென்ற சுந்தம்ரமா கண்டிகையைச் சேர்ந்த லட்சுமணன் மற்றும் அவரது தாயாரை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சரமாரியாக அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளிப்பட்டு சாலையில் மசூதி அருகே சென்று கொண்டிருந்த சுந்தரம்மா கண்டிகை காலனியை சேர்ந்த நபரை, ஊரை சேர்ந்த ஒருவர் தாக்கியதாக தெரிகிறது. இந்த, 2 சம்பவங்கள் தொடர்பாக 2 தரப்பினரும், பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காலனி பகுதியைச் சேர்ந்த அப்பு, குமார் மற்றும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த ரகு, மனோகர், விஜய் ஆகிய 5 வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர்.

The post பொதட்டூர்பேட்டையில் இரு தரப்பினரிடையே மோதல்: 5 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Pothatturpet ,Pallipattu ,Sundaramma ,Kandigai ,Colony ,Podhatturpet Municipality ,Pallipatu ,Pallipatt State Highway ,Sundaramma Kandigai Colony ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை